சிவராத்திரி வழிபாடு செய்யும் முறை
ஆலயம் சென்று சிவனை வழிபடுதல் நன்று.
வீட்டு பூஜை அறையிலும் வழிபாடு செய்யலாம்.
நியமப்படி பூஜை செய்பவர்கள் சிவராத்திரி இரவு
நான்கு சாமங்களிலும் பூஜை செய்ய வேண்டும்
முறைப்படி பூஜிப்பவர்கள் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய
பால், தயிர், நெய், கோமயம், தேன், சர்க்கரை, கருப்பஞ்சாறு
ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
கங்கை நீரால் அபிஷேகம் செய்தல் மிகவும் நல்லது.
அபிஷேகம் ஆனதும் சந்தனம், அகில் குழம்பு, அரைத்த பச்சை கற்பூரம்,
அரைத்த குங்குமப்பூ ஆகியவற்றை லிங்கத்திருமேனியில் பூசலாம்
வில்வ இலை, வன்னி இலை, தாமரை மலர், செண்பகப்பூ, நந்தியாவட்டை
ஆகியவற்றால் இறைவனை பூஜித்தல் வேண்டும்.
மல்லிகை, முல்லை ஆகிய மலர்களையும் பயன்படுத்தலாம்
சிவபெருமானுக்கு நிவேதனம் செய்ய
முதல் சாமத்துக்கு பச்சைபயறு பொங்கலும்,
இரண்டாம் சாமத்திற்கு பாயாசமும்,
மூன்றாம் சாமத்திற்கு எள் அன்னமும்,
நான்காம் சாமத்திற்கு சுத்தன்னமும் உகந்தவை
பஞ்சவில்வம் எனப்படும் வில்வம், நொச்சி, முட்கிளுவை, மாவிலங்கை,
விளா ஆகியவற்றைக் கொண்டு திருநீறு, மல்லிகை, முல்லை போன்ற
புஷ்பங்களைக் கொண்டும் அர்ச்சனை செய்யலாம்.
தேவாரம், திருவாசகம், திருவருட்பா, முதலான சிவபெருமானுக்கான
பக்திப்பாடல்கள் மற்றும் நாமாவளிகள் ஸ்தோத்திரங்கள் ஆகியவற்றை
பூஜையின்போது சொல்ல வேண்டும்.
ஓம் நமசிவாய என்ற பஞ்சாட்சர மட்டுமேகூட உச்சரிக்கலாம்.
சிவசிவ என்றால் கூட போதும்.
சிவசிவ என தீவினை மாளுமே.
சிவராத்திரியன்று படிக்க வேண்டியது :
சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் மிக முக்கியமாக படிக்க வேண்டியது
ஞானசம்பந்தரின் கோளறு பதிகமாகும்.
இது மனதிற்கு தைரியத்தை தரும்.
எந்த கிரகங்களின் தாக்கம் இருந்தாலும் அதை நீக்கிவிடும்.
இதைத்தவிர சிவபுராணம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம்,
நடராஜ பத்து, தேவாரம், திருவாசகம், லிங்கபுராணம்,
திருவிளையாடற் புராணம், பெரியபுராணம் ஆகியவற்றை
படித்தாலும், கேட்டாலும் மற்ற நாட்களைவிட அதிக பலன் கிடைக்கும்.
சிவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் அதிகாலை நீராடி
சிவசந்நதியில் சிவபூஜை மேற்கொள்ளுவது சிறந்தது
அவ்வாறு பூஜையைச் செய்து முடிக்க
முழயாதவர்கள் கோயிலுக்குச் சென்று அங்கு நடக்கும்
பூஜையைக்கண்டு களிக்கலாம்.
அன்று பூராகவும் உபவாசமாக இருந்து வரவேண்டும்.
பகலில் உறங்கக்கூடாது.
இரவிலும் நான்கு காலங்களிலும் நடக்கும்
பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment